நாளை இடம்பெறும் 10 வது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வில் சபாநாயகர் தெரிவும் இடம்பெறவுள்ளது.

1 year ago



பத்தாவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு நாளை இடம்பெறவுள்ள நிலையில், அதன்போது, சபாநாயகர் தெரிவு இடம்பெறும் என                தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம், ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க தலைமையில் நேற்று இடம்பெற்றது.

21 அமைச்சரவை அமைச்சர்கள் நேற்று முன்தினம் பதவியேற்றிருந்த நிலையில், அவர்கள் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இதன்போது, புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளராக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நியமிக்கப்பட்டார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, பத்தாவது நாடாளுமன்றத்தின் சபை முதல்வராகப் போக்குவரத்து நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளராக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவு      செய்யப்பட்டுள்ளார் என நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.