மட்டக்களப்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி உறவினர்கள் போராட்டம்.

2 years ago


மட்டக்களப்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

குறித்த போராட்டமானது, இன்று (24.07.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதன்போது, கருத்து தெரிவித்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்,

“நாங்கள் கேட்பது இழப்பிடையோ மரணச் சான்றிதழையோ அல்ல.முறையான நீதி விசாரணையே. உரிய தீர்வை அரசாங்கம் விரைவில் பெற்றுத்தர வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர்.