முல்லைத்தீவு முள்ளியவளை மாமூலைப் பகுதியில் வீடு உடைத்து 10 பவுண் நகைகள் திருட்டு

1 year ago



முல்லைத்தீவு முள்ளியவளை மாமூலைப் பகுதியில் உள்ள வீடொன்று உடைக்கப்பட்டு 10 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளன என்று முள்ளியவளை பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

வீட்டில் எவரும் இல்லாத சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியே இந்தத் திருட்டு இடம்பெற்றுள்ளது.

முறைப்பாட்டுக்கு அமைய மேலதிக விசாரணைகளை முள்ளியவளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.