இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாட, இந்தியப் பிரதிநிதிகள் நாளை இலங்கைக்கு வருகை

1 year ago



இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடுவதற்காக இந்தியப் பிரதிநிதிகள் குழுவினர் நாளை இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 பேர் கொண்ட குழுவினர் நாட்டுக்கு வருகைதரவுள்ளதாக கடற்றொழில் அமைச்சின் செயலாளர் எம். பி.என்.எம் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்குமாறு கோரி இந்திய மீனவர்கள் நேற்று முன்தினமும் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். 

அண்மைய பதிவுகள்