பிரபாகரனின் படத்தை முகநூலில் பகிர்ந்தார் என்ற குற்றச்சாட்டில் யாழில் ஒருவர், பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது

1 year ago



தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் புகைப்படத்தை முகநூலில் பகிர்ந்தார் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் ஒருவரை, பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியைச் சேர்ந்த 37 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டார்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன், அந்த அமைப்பின் சீருடையில் உள்ள புகைப்படத்தை அவர் தனது சமூக ஊடகத்தில் பகிர்ந்திருந்தார்.