சீனாவின் ஜுஹாய் நகரில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவர்கள் மீது வாகனம் மோதியதில் 35 பேர் உயிரிழந்தனர்.

1 year ago



சீனாவின் ஜுஹாய் நகரில் உள்ள மைதானத்திற்கு வெளியே உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவர்கள் மீது வாகனம் மோதியதில் 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் 43 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் பெரியவர்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் 62 வயதுடையவர், விவாகரத்து செய்ததன் பின்னர் ஏற்பட்ட சொத்து தீர்வின் போது ஏற்பட்ட பிரச்சினை தொடர்பான மன அழுத்தத்தின் காரணமாகவே சந்தேக நபர் இவ்வாறு செய்துள்ளதாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அண்மைய பதிவுகள்