படைகளின் வசமுள்ள தமது காணிகளை வழங்குமாறு கோரி பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கேப்பாபிலவு மக்கள் மனு
1 year ago

படைகளின் வசமுள்ள தமது காணிகளை தங்களிடமே வழங்குமாறு கோரி பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கேப்பாபிலவு மக்கள் மனு ஒன்றை கையளித்தனர்.
பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவான பரப்புரை கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்திருந்தார்.
புதுக்குடியிருப்பில் நேற்று நடந்த பரப்புரையில் பங்கேற்ற பிரதமரை நேரில் சந்தித்த கேப்பாபிலவு மக்கள் படைகளின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி மனு ஒன்றை வழங்கினர்.
இதேபோன்ற மனுவை அவர்கள் வடக்கு ஆளுநர், முல்லைத்தீவு அரச அதிபர் ஆகியோரிடமும் முன்னர் வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.





