பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.
1 year ago

போர்க் காலத்தில் கைவிடப்பட்ட பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை வெகுவிரைவில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று கடற்றொழில் அமைச்சரும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
வடமாகாணத்தை விரைவில் அபிவிருத்தி செய்யவேண்டிய தேவை காணப்படுகின்றது. அதிலும் குறிப்பாக காங்கேசன்துறை சிமெந்துத் தொழிற்சாலை மற்றும் பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை என்பன விரைவில் சீரமைக்கப்பட்டு இயங்கு நிலைக்குக் கொண்டு வரப்படும்.
அத்துடன், உப்பள அபிவிருத்திகள் தொடர்பிலும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன - என்றார்.
அண்மைய பதிவுகள்
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.




