வவுனியாவில் மரக்கடத்தலை முறியடியத்துள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

1 year ago



வவுனியா, மரக்காரம்பளையில் மரக்கடத்தலை முறியடியத்துள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் இன்று தெரிவித்தனர்.

வவுனியா, மரக்காரம்பளை பகுதியில் சந்தேகத்துக்கிடமாக மரங்களை ஏற்றிச் சென்ற ஜீப் ரக வாகனத்தை நெளுக்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திவுல்வெவ தலைமையிலான போக்குவரத்துப் பொலிஸார் சோதனை செய்தபோது சுமார் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான 72 மரங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன், மரக்கடத்தலுக்குப் பயன்படுத்திய ஜீப் ரக வாகனமும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டதுடன், சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்மைய பதிவுகள்