5 இராஜாங்க அமைச்சர்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியிலிருந்து நீக்கியுள்ளார்.

1 year ago


உடன் நடைமுறைக்கு வரும் வகையில் 5 இராஜாங்க அமைச்சர்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியிலிருந்து நீக்கியுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனை அறிவித்துள்ளது.

இராஜாங்க அமைச்சர்களான கீதா குமாரசிங்க, ஷஷீந்திர ராஜபக்ஷ, அமித் தேனுக விதானகமகே, பிரசன்ன ரணவீர மற்றும் டி.வி. சானக ஆகியோரே இவ்வாறு பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். 

அரசியலமைப்பின் 47 (3) (a) பிரிவின் கீழ் உள்ள ஜனாதிபதியின் அதிகாரத்திற்கு அமைய இவர்கள் பதவி நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.