வவுனியா குளத்தின் வான்பாயும் இடத்தில் நீருடன் பெருமளவான மீன்களும் வருவதனால், மக்கள் பிடித்துச் செல்கின்றனர்.

1 year ago



வவுனியா குளத்தின் வான்பாயும் இடத்தில் நீருடன் பெருமளவான மீன்களும் வருவதனால் அதனைப் போட்டி போட்டு மக்கள் பிடித்துச் செல்வதை அவதானிக்க முடிகிறது.

வவுனியாவில் பெய்த கடும் மழை காரணமாக பல குளங்கள் வான் பாய்ந்து வருகின்றன.

அதில் வவுனியா நகரை அண்டியுள்ள பிரதான குளமான வவுனியா குளமும் வான் பாய்ந்து வருகின்றது.

குறித்த வான் பாயும் நீருடன் குளத்து மீன்களும் பெருமளவில் வருவதால் நுளம்பு வலை, மீன் வலை, துணி, வேட்டி என்பவற்றைக் கொண்டு வான்பாய்வதைப் பார்க்க வரும் மக்களும் மீன்களை போட்டி போட்டுப் பிடிப்பதை அவதானிக்க முடிகின்றது.

இதன்பேது சிலாப்பியா, யப்பான், விரால், கெளிறு போன்ற பெருமளவான மீன்கள் பிடிக்கப்படுவதுடன், அதனைப் பிடித்துச் செல்பவர்கள் மகிழ்ச்சியில் செல்வதையும் அவதானிக்க முடிகின்றது.

அண்மைய பதிவுகள்