இலங்கையில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அதிகரிக்கும்.-- வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

1 year ago


நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்பட்ட வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக தற்போது நிலவும் மழையுடனான வானிலை நேற்று முதல் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும், ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கான சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக் கப்பட்டுள்ளது.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ளப் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை   அறிவுறுத்தியுள்ளது.


அண்மைய பதிவுகள்