வவுனியா வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய விவகாரம் இருவரை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அழைப்பு

1 year ago



வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய விவகாரம் தொடர்பில் அந்த ஆலயத்தின் முன்னாள் உறுப்பினர்கள் இருவரை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் (ரிஐடி விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை    ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் முன்னாள் தலைவர் சசிகுமார் மற்றும் முன்னாள் செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோரை 2024நவம்பர் 9 ஆம் திகதி (இன்று) சனிக்கிழமை வவுனியாவில் உள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, முன்னாள் போராளியான சசிகுமாரின் அனைத்து புனர்வாழ்வு ஆவணங்களையும் விசாரணைக்கு கொண்டு வருமாறு பயங்கரவாதத் தடுப்புப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தொலைபேசி அழைப்பு மூலம் அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

அண்மைய பதிவுகள்