இலங்கையின் கடல் எல்லையை மீறிய குற்றச்சாட்டில் இந்த வருடத்தில் 497 இந்திய மீனவர்கள் கைது.-- கடற்படை தெரிவிப்பு

1 year ago



இந்த வருடத்தில் நாட்டின் கடல் எல்லையை மீறிய குற்றச்சாட்டில் 497 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கடற்படை பேச்சாளர் கப்டன் கயான் விக்ரமசூரிய கருத்து வௌியிடுகையில்,

66 மீன்பிடி படகுகளில் வந்த இந்திய மீனவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், இந்நாட்டு மீனவர்களின் கடற்றொழில் பிரச்சினைகளுக்கு கடற்படை அதிகபட்ச பங்களிப்பை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.