மன்னாரில் வனப் பகுதியில் இறால் பண்ணை அமைப்பதற்கு விடுவிக்கும் வர்த்தமானி அறிவித்தலுக்கான தடையை உயர்நீதிமன்றம் நீடிப்பு
1 year ago

மன்னார் - விடத்தல்தீவில் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் ஒரு பகுதியை இறால் பண்ணை அமைப்பதற்காக விடுவிக்கும் வர்த்தமானி அறிவித்தலுக்கான இடைக்கால தடையை உயர்நீதிமன்றம் நீடித்துள்ளது.
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் விடத்தல்தீவு பாதுகாப்பு வனப் பகுதியிலிருந்து 168 ஏக்கர்களை விடுவிப்பதற்கு வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டது.
இந்த வர்த்தமானி அறிவித்தல் மீதான தடையே நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை நேற்றைய தினம் உயர் நீதிமன்ற நீதியரசர்கள் எஸ். துரைராஜா, ஏ. எச்.எம்.டி. நவாஸ், ஜனக் டி சில்வா ஆகியோரின் அமர்வு விசாரித்தது.
இதன்போதே இந்த வர்த்தமானி அறிவிப்பு மீதான தடையை எதிர்வரும் ஜூலை 29ஆம் திகதி வரை நீடித்து உத்தரவிடப்பட்டது.
அண்மைய பதிவுகள்
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.





